தடுப்பூசி மருந்து
குறிப்பிட்ட கிருமிகளுக்கு எதிராகப் போரிட்டு நோயைத் தடுக்க நமது நோயெதிர்ப்பு முறைமைக்கு உதவும் ஒரு வகை மருந்து. பொதுவாக ஒருவர் கிருமியை எதிர்கொள்வதற்கு முன்பாக அவருக்குத் தடுப்பூசி மருந்துகள் கொடுக்கஇடப்படும். நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்பிகளை உருவாக்க நோயெதிர்ப்பு முறைமைக்கு ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் ஊக்கமளிக்கும்.
சோதனை-நிலைத் தடுப்பு மருந்து
இன்னும் சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும், மற்றும் அனுமதி வழங்கப்படாமலிருக்கும் ஒரு புதிய தடுப்பூசி மருந்து.
தடுப்பூசித் தயக்கம்
தடுப்பூசி மருந்தினைப் பற்றி ஒருவர் உறுதியில்லாமல் நிலையில் இருக்கும் நிலைமை அல்லது கிடைக்கக்கூடியதாக இருக்கும் தடுப்பூசி மருந்தினப் பெற்றுக்கொள்ள அவர் தாமதித்தல் அல்லது மறுத்தல்.
திரிபு (உருமாற்றம்)
ஒரு வைரஸின் உட்புறமாக உள்ள மரபுசார் தகவல்களில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களாகும் இது. ஒரு வைரஸ் பன்மடங்காகும் போது அல்லது அதன் பிரதிகளை அது உருவாக்கும்போது அதன் ‘திரிபு’கள் (variants) ஏற்படலாம்.
குப்பி
மருந்தை அடைப்பதற்கான சிறு கலன்
வைரஸ் உதிர்வு
வைரஸ் உங்களுடைய சரீரத்துள் உருவானதும், அது நீங்கள் இருக்கும் சுற்றுச்சூழலில் வெளிவிடப்படத் துவங்கும். அந்த கட்டத்தில் வைரஸ் பரவலாம் அல்லது மற்றவர்களுக்கு அது கடத்தப்படலாம்.
‘கோவிட்-19’ நோயைத் தோற்றுவிக்கும் ‘வைரஸ்’
இலிருந்து வேறுபட்ட ஒரு ‘வைரஸ்’-இன் மாற்றியமைக்கப்பட்ட உருவை இது கொண்டிருக்கும். ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கும் ‘வைரஸ்’-இல் இருக்கும் வஸ்து இந்த மாற்றியமைக்கப்பட்ட வைரஸ்-இற்குள்ளாக இருக்கும். இது “வைரல்-வெக்டர்” என்று சொல்லப்படுகிறது. நமது உயிரணுக் கலன்களுக்குள்ளாக இந்த வைரல்-வெக்டர் ஒரு முறை சென்றதும், ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கும் ‘வைரஸ்’-இன் தனித்துவத்தைக் கொண்ட புரதம் ஒன்றை உருவாக்குவதற்கான உத்தரவுகளை இந்த மரபியல் வஸ்து உயிரணுக் கலன்களுக்குக் கொடுக்கும். இந்த உத்தரவுகளைப் பயன்படுத்தி, நமது உயிரணுக் கலன்கள் இந்தப் புரதத்தின் பிரதிகளை உருவாக்கும். எதிர்காலத்தில் நமக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அந்த ‘வைர’ஸுடன் எப்படிப் போரிடுவது என்பதை நினைவுகூரும் ‘T- லிம்ஃபோசைட்டுகள்’ மற்றும் ‘B- லிம்ஃபோசைட்டுக’ளை உருவாக்க நமது சரீரத்தினை இது தூண்டும்.
குறைவுறும் நோயெதிர்ப்புத் திறன்
காலப் போக்கில் உங்களுடைய நோயெதிர்ப்புத் திறன் படிப்படியாகக் குறைந்து வரும் நிலை.
நோயெதிர்ப்பி
சரீரம் நோய்வாய்ப்படும்போது, அல்லது சரீரம் தடுப்பூசி மருந்து ஒன்றைப் பெறும்போது, நோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சரீரம் நோயெதிர்ப்பிகளை உற்பத்தி செய்யும். அதே நோய் மீண்டும் ஏற்படும்போது, சரீரத்தினால் அந்த நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டுகொள்ள இயலும்.